தமிழ்நாடு: சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் – மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?
பட மூலாதாரம், SOCIAL MEDIAபடக்குறிப்பு, குழந்தையின் உடலை சுமந்து செல்லும் காட்சி26 நிமிடங்களுக்கு முன்னர்அந்த பெற்றோர் இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை கைகளில் சுமந்துகொண்டு , மலையேறி தங்களது கிராமத்திற்கு நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் கடந்த ஞாயிறன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அவர்களின் ஊருக்கு சாலை வசதி இல்லாததால், அந்த குழந்தையின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது, குழந்தையை இழந்து தவித்திருந்த அவர்களை மேலும் உடைந்துபோக செய்தது.…









