காமன்வெல்த் போட்டி முடிந்ததும் மாயமான பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்; கிளாஸ்கோவில் என்ன நடந்தது? | Pakistan Boxer Disappears After Leaving CWG Hotel

Share

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (Commonwealth Games 2026) நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீரர் குத்ரத்துல்லா (Qudratullah) திடீரென மாயமான சம்பவம் சர்வதேச விளையாட்டு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் (Glasgow) நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய குத்ரத்துல்லா, தனது போட்டிகளை முடித்த பிறகு அவர்களது அணி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் பாகிஸ்தான் அணி தாயகம் திரும்பத் தயாரானபோது அவர் அறையில் இல்லாதது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் அதிக கவனம் ஈர்த்த விஷயம், அவரது பாஸ்போர்ட் (Passport), பயண ஆவணங்கள் (Travel Documents) மற்றும் விமான டிக்கெட் (Return Ticket) ஆகியவை அணி மேலாளரிடமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதுதான். இதையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு (Pakistan Boxing Federation) மற்றும் பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் (Pakistan Olympic Association) இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. கிளாஸ்கோ காவல்துறையினருடனும் அவர்கள் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com