மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை – குமரியில் அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சரவணகுமார்(35) என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி (40) என்பவருக்கும் இடையே மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தில் தூங்கி கொண்டிருந்த சரவணகுமாரை சிமெண்ட் கல்லால் தலையில் தாக்கியுள்ளார் தங்கபாண்டி. இதில் சரவணகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கொலை குறித்து…









