காவிரி: தமிழக முதல்வர் விஜயிடம் கர்நாடக முதல்வர் வலியுறுத்துவது என்ன?

Share

'கர்நாடகா வர வேண்டாம்' - விஜய் வருகையை டி.கே. சிவக்குமார் தவிர்க்க முயல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காவிரி நதிநீர் பிரச்னை, மேகேதாட்டில் புதிய அணை கட்டும் விவகாரம் ஆகியவை தொடர்பாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியானது.

இதற்கிடையே, தற்போது கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், விஜய் இப்போது நிலவும் சூழலில் வருவதற்குப் பதிலாக, நிலைமை சுமூகமானதாக மாறிய பிறகு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினசரி 3,500 கன அடி வீதம் 4 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் நீர் இருப்பு மற்றும் ஆணையத்தின் உத்தரவு குறித்து கர்நாடக முதலைமைச்சர் டிகே சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

காவிரி நதிநீர் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவருடன் 13 பேர் கொண்ட குழு கர்நாடகா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com