ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் கையெடுத்து இட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுநர்…









