PBKS vs LSG: “வரும் போட்டிகளில் சிறந்த அணியாக வலிமையுடன் செயல்படுவோம்”-கேப்டன் ரிஷப் பண்ட்| lsg captain rishabh pant post match speech

Share

ஐபில் தொடரில் நேற்று ( ஏப்ரல் 19) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் vs லக்னோ அணிகள் மோதின.

இதில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் அசைக்க முடியாத அணியாக அமந்துள்ளது பஞ்சாப் அணி. லக்னோ அணி அதே 8வது இடத்தில் நீடிக்கிறது.

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், “தோல்விக்கான காரணத்தை ஒரு குறிப்பிட்ட சூழலை மட்டும் சுட்டிக்காட்டி விவரிப்பது கடினமான ஒன்றாகும்.

பந்துவீச்சாளர்கள் ஓரளவிற்குச் சிறப்பான பங்களிப்பையே வழங்கினார்கள். இருந்தாலும் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சில பலவீனமான இடங்கள் இருக்கவே செய்கின்றன.

அதே வேளையில், இப்போட்டியின் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களும் உண்டு. பேட்டிங் குறித்து நாங்கள் ஆலோசித்த சில விஷயங்கள் களத்தில் நடப்பதை இன்று காண முடிந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com