Yearly Archives: 2026

அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் 2024ம் ஆண்டு திறக்கப்படுவதற்கு முன்பு அங்கு அபிநந்தன் லோதா நிறுவனம் சராயு என்ற பெயரில் குடியிருப்பு வளாக திட்டத்தை உருவாக்கி வந்தது. அதில் அமிதாப் பச்சன் 15 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி இருக்கிறார். அந்த நிலம்…

"கேவலம்… இதைவிட மோசமாக சொல்ல வார்த்தையில்லை!" – படுதோல்வி குறித்து ஷ்ரேயாஸ் காட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இது டி20 வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும். இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அணியின் ஆட்டம் ‘கேவலமாக’ இருந்ததாகவும், இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோற்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். கேவலமான ஆட்டம்!போட்டிக்குப்…

டி20 உலகக் கோப்பையில் ஜொலித்த சஞ்சு சாம்சன் ஏன் இந்திய அணியில் இல்லை? கிரிக்கெட் நிபுணர்கள் அதிருப்தி

பட மூலாதாரம், Shubhajit Roy Karmakar/NurPhoto via Getty Imagesபடக்குறிப்பு, ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லைகட்டுரை தகவல்”சஞ்சு சாம்சன் தொடர்பான முடிவைச் சுற்றியுள்ள சூழல் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.””அவருக்கு ‘ஓய்வு’ அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. நான் நீண்ட காலமாக இத்துறையில் இருப்பதால், ‘ஓய்வு’ என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்.”ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம் பெறாதபோது, பிரபல…

போர்க்களத்திலிருந்து உலகக் கிரிக்கெட் வரை – ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம் முடிந்தது!| afkhan player shapoor zadran dies at 38

2010 முதல் 2016 வரை நடைபெற்ற நான்கு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி, 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஆரம்பகட்டப் பயணத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போராடிக் கொண்டிருந்தது.ஷபூர் ஜத்ரான்கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஷபூர், அழுத்தமான சூழலில் ஒரு…

`முக்கிய நபர் சிங்கப்பூருக்குத் தப்பிவிட்டார்' ; செந்தில் பாலாஜிக்கு `நிபந்தனை' முன்ஜாமீன்!

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்த விசாரணையின்போது, இது வெறும் லஞ்சப் புகார் மட்டுமல்ல, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி என்றும், இதில் ஹவாலா பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அரசுத்…

ARG vs EGY : கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோ; காட்டமான எகிப்து கோச்! – பரபரப்பான நொடிகளின் தொகுப்பு!

அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: காட்டமான எகிப்து கோச் அர்ஜென்டினா vs எகிப்து: காட்டமான எகிப்து கோச் நன்றி

இரான் மீது அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதல்’ – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், ஏமி வாக்கர் மற்றும் டேபி வில்சன்பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா “சக்திவாய்ந்த” தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.இந்த நீரிணையில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை…

`உலகக்கோப்பையில் மெஸ்ஸி நீடிக்க எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!' – எகிப்து கோச்'சின் நேரடி குற்றச்சாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், நடுவர்களின் முடிவுகள் ஒருதலைபட்சமாக இருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். “நாங்கள் ஏமாற்றப்பட்டோம், மெஸ்ஸியை போட்டியில் வைத்திருக்கவே இப்படிச் செய்யப்பட்டது” என்று அவர் கூறியுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.செவ்வாயன்று நடந்த இந்த பரபரப்பான போட்டியில், எகிப்து அணி ஒரு கட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. யாசர் இப்ராஹிமின்…

தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் : துக்கங்கள் தீர்ப்பாள் அஷ்டபுஜ துர்கை! | history of tanjore district ammankudi durgai temple

பெரும் படையெடுப்போ அல்லது வேறு முக்கிய காரியங்களோ… எதுவாயினும் முதலில் இந்த அம்மனை வணங்கியபிறகே காரியத்தில் இறங்குவாராம் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். அதனால் அவருக்கும் சோழதேசத்துக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைத்தது என்கிறார்கள். அவர் இந்த ஆலயத்தில் கருங்கல் திருப்பணிகளை மேற்கொண்டதுடன், கோயிலுக்கு ஏராளமான நிவந்தங்களையும் அளித்து வழிபட்டிருக்கிறாராம். ஸ்காந்த புராணத்தின் 66-வது அத்தியாயத்தில், இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார்கள்.அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் விக்னஹர விநாயகர் அற்புத சாந்நித்தியத்துடன் திகழ்கிறது அம்மன்குடி ஆலயம். இந்த…

வயநாடு மண் சரிவு: ‘இருவர் உயிரிழப்பு.. பலரை காணவில்லை’ – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்கேரள மாநிலம் வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.”மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்” என, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார்…

1 5 6 7 8 9 145