இந்தியா ரோஹிஞ்சா அகதிகளை நடுக்கடலில் இறக்கிவிட்டதா? ஐ.நா விசாரணை
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டெல்லியில் அகதிகள் முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரோஹிஞ்சா அகதிகள் இந்திய கடற்படை கப்பலில் இருந்து மியான்மர் கரையோரம் நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டதாக எழுந்துள்ள கூற்றை விசாரிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.கடந்த வியாழன் அன்று ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் இந்திய கடற்படை கப்பலில் இருந்து ரோஹிஞ்சா அகதிகள் வலுக்கட்டாயமாக அந்தமான் கடலில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய “தேவையற்ற…