ஈரோடு: மாநில அளவிலான ஓட்டப்பந்தயம்; தங்கம் வென்று அசத்திய சகாய ஜெமிமா!
தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், T.சவேரியார்புரத்தை சேர்ந்த சகாய ஜெமிமா என்ற பத்தாம் வகுப்பு மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.ஜெமிமாவின் வெற்றி குறித்து பள்ளி முதல்வர் மரிய செல்வராணி கூறுகையில், “மாணவியின் முழுமனதான ஈடுபாடு, தொடர் பயிற்சி மற்றும் உழைப்புதான் மாணவியின் வெற்றிக்கான காரணம். பள்ளிக்கென தனியாக விளையாட்டு பயிற்சியாளர் இல்லாத நிலையிலும் மாணவ-மாணவியரின் ஈடுபாடு மற்றும் திறமைகளை கருத்தில்…









