கூகுளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு… மேட்ரிமோனி நிறுவனம் ஜெயித்தது எப்படி?
கூகுள் மீது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் கோபத்தில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆனால், டிஜிட்டல் பொருளாதாரத்தின் ‘மோனோபலி’-ஆக இருக்கும் கூகுளைத் தடுப்பது கடினமாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில், கூகுள் நிறுவனம் கொண்டுவந்த கட்டண விதிமுறையை ஆட்சேபித்து மேட்ரிமோனி டாட்காம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.…








