`சுவர், கம்பம், கம்பிகள், பெட்டிகள் தாண்டி தாவிக் குதி!' சென்னைக்கு வந்தது பார்க்கூர் விளையாட்டு!
சென்னை ஈக்காட்டுத்தாங்களில், தமிழகத்தின் முதல் பார்க்கூர் (Parkour) வகுப்பை நடத்திவருகிறார்கள் விஷ்வா, விஷால், விக்னேஷ் ஆகிய மூன்று நண்பர்கள். மூவருமே வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள்.முதல் முறையாக விஷ்வா, யூடியூபில் பார்த்துக் கற்றுக்கொண்ட பார்க்கூர் வித்தைகளை, ஒரு பூங்காவில் முயன்றுகொண்டிருக்கும்போது, அங்கு விஷால் வந்துள்ளார். விஷால், விஷ்வாவிடம் தனக்கும் பார்க்கூர் சொல்லிக்கொடுக்கும்படி கேட்க, அந்தப் பூங்காவில் ஒரு சிறிய குழு வார இறுதிகளில் பார்க்கூர் செய்ய ஆரம்பித்தனர். கடைசியாக இவர்களுடன் விக்னேஷும் சேர்ந்து, மூவரும் சென்னையில் பார்கூர் பாட்…