பெரிதாகும் காது துளை… இது மட்டும்தான் நிரந்தர தீர்வு! | Permanent remedy for enlarged ear hole

Share

எனவே காதுகளில் துளையிடும் சமயத்திலேயே காதுகளை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துளையிட வேண்டும். இது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.

வயதாக வயதாக காதுகளில் உள்ள தோல் விரிவடைந்து துளை பெரிதாகும்.

எடை அதிகமான கம்மல்களை தொடர்ந்து அணியும்போது காது துளை விரிவடைந்துவிடும். காது துளை பெரிதாகாமல் இருக்க எடை அதிகமாக உள்ள கம்மல்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

துளைகள் பெரிதான பிறகு அதனை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியான வழி. காது மடல்களில் எந்தத் துளையை அடைக்க வேண்டுமோ அதை இன்னும் சற்று பெரிதாக்கி, சுற்றியிருக்கும் தோல் அனைத்தையும் இணைத்து, தையல் போடுவதே இந்த அறுவை சிகிச்சையாகும்.

இப்படிச் செய்யும்போது பெரிதாக இருக்கும் துளையை முற்றிலும் அடைக்க முடியும். இரண்டு, மூன்று மாதங்கள் கம்மல் அணியாமல் உரிய முறையில் காயங்களை ஆற விட வேண்டும். அதன் பிறகு புதிய துளையிட்டு மீண்டும் கம்மல் அணிந்து கொள்ளலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com