ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய பின் கை கொடுக்காத இந்திய பேட்டர்கள்; கேப்டன் சூர்யகுமார் கூறிய காரணம் என்ன?

Share

இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா, பாகிஸ்தான்

துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஹர்திக் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்தது. பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப், பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொள்ளும் பந்துகள் அனைத்தையும் அடித்து ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். முகமது ஹாரிஸ் , பும்ராவின் பந்தை அடித்து ஆட முற்பட்டு ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் அளித்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் பும்ராவின் பந்து வீச்சில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். சர்வதேச T20 போட்டிகளில் பும்ரா பந்துவீச்சில் 2 சிக்சர்களை அடித்த பேட்டர் 6 பேர் மட்டுமே என கிரிக் இன்ஃபோ இணையதளம் கூறுகிறது. இந்த பட்டியலில் ஃபர்ஹானும் இணைந்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com