பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளைக் காட்டிலும் ஒரு போட்டி கூடுதலாக (மொத்தம் 4 போட்டிகள்) கைவசம் இருப்பது இவர்களுக்குப் பெரும் சாதகம். இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யலாம். ஒருவேளை மூன்று வெற்றிகளைப் பெற்றால், முதல் இரண்டு இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
ஆரம்பத் தடுமாற்றங்களுக்குப் பிறகு மீண்டு வந்துள்ள சென்னை அணி தற்போது 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொதுவாக 16 புள்ளிகள் தகுதிக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், மீதமுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தது இரண்டில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது. ஒன்றில் மட்டுமே வென்றால், இவர்களது தகுதி வாய்ப்பு மற்ற அணிகளின் ‘தயவை’ எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
ராஜஸ்தான் அணி, 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்புகள் இன்னும் முடிந்துவிடவில்லை. இவர்களது ரன் ரேட் சற்று பலவீனமாக இருப்பது பின்னடைவாகும். மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் கட்டாயம் வென்றாக வேண்டும். ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் பெரிய அளவிலான வெற்றிகள் இவர்களுக்குத் தேவைப்படுகின்றன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
கேகேஆர் அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது. 10 போட்டிகளில் 9 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 17 புள்ளிகளுடன் தகுதி பெற முடியும். ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும், அது அந்த அணியின் வெளியேற்றத்தை உறுதி செய்துவிடும். வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் முடிவுகளும் இவர்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும்.