உதாரணத்துக்கு திங்கள், செவ்வாய், புதன்கிழமை நடந்துவிட்டு, வியாழக்கிழமை பிரேக் விடலாம். மீண்டும் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பிரேக் எடுத்துக்கொள்ளலாம். திங்கள் முதல் வெள்ளிவரை நடந்துவிட்டு, சனி, ஞாயிறு பிரேக் எடுப்பதைத் தவிர்க்கவும்.
வேகமாக நடக்க வேண்டுமா, கைகளை வீசி நடக்க வேண்டுமா என்றெல்லாம் சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. நீங்கள் நடப்பதை உணர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு நிதானமாக நடப்பது போல நடக்கக்கூடாது. தொடர்ந்து 30 நிமிடங்கள் நடக்க நேரமில்லை என்பவர்கள், காலை, மதியம், மாலை என பிரித்துக்கொண்டு நடக்கலாம், தவறில்லை. கால்களில் புண்கள் இருப்பவர்கள், கால் நரம்புகளில் பாதிப்புள்ளவர்கள், கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயால் கண் பாதிப்பு அதிகமுள்ளவர்கள் போன்றோர் வாக்கிங்கை தவிர்க்கலாம். இப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.