India: திலக்கின் மேட்ச் வின்னிங் ஆட்டம்;ரவியின் சர்ப்ரைஸ் பவுண்டரி திரில்லரை இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருக்கிறது.Ind vs Engசூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வருண், வாஷி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் என நான்கு ஸ்பின்னர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ஸ்பின்னர்களின் அட்டாக்கை இங்கிலாந்து பேட்டர்களால் சமாளிக்கவே முடியவில்லை. இங்கிலாந்து…

பாலகிருஷ்ணா: டாகு மகாராஜ் திரைப்பட வெற்றி விழாவில் ஊர்வசி ராவ்டெலாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் சர்ச்சை

பட மூலாதாரம், YoutubeScreengrabகட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி தெலுங்கு சேவைபதவி, 25 ஜனவரி 2025, 08:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்நடிகர் பாலகிருஷ்ணா தனது சக நட்சத்திரமான ஊர்வசி ராவ்டெலாவிடம் நடந்துகொண்ட விதத்தை பலரும் பார்த்திருப்பார்கள்.”அண்மையில் ‘டாகு மகாராஜ்’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அங்கே ‘டபிடி டபிடி’ பாடலுக்கு ஊர்வசி ராவ்டெலாவுடன் இணைந்து பாலகிருஷ்ணா நடனமாடினார். அங்கே அவர் இறுதியில் ஒரு செயலைச் செய்தார். அதை இங்கே விளக்க நான் விரும்பவில்லை. அந்த காட்சியையும் உங்களுக்கு…

சண்டிகருக்கு 403 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தமிழக அணி | Tamil Nadu set a target of 403 runs for Chandigarh.

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – சண்டிகர் அணிகள் இடையிலான போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி ஆந்த்ரே சித்தார்த் (106) விளாசிய சதத்தின் உதவியுடன் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 97 ரன்கள் உதவியுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 72.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு…

Ajith Kumar : ‘அப்பா நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்..’ – அஜித் நெகிழ்ச்சி | Ajith’s Thanks note for winning Padma Pushan

பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வட்டாரத்திற்கும் பிஸ்டல் & ரைபிள் சூட்டிங் வட்டாரத்திற்கும் கூட நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அன்பும்தான் என்னுடைய வலிமையாக இருந்திருக்கிறது. உங்களுக்கும் நன்றி. என்னுடைய தந்தை இந்தத் தருணத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அவருடைய ஆன்மாவும் எண்ணங்களும் நிறைந்திருப்பதில் அவர் பெருமைக் கொள்வார் என நினைக்கிறேன். ஷாலினி, உன்னுடனான எனது பந்தம்தான் என் வாழ்வில்…

Chepauk: ‘ரசிக வெள்ளத்தில் சேப்பாக்கம்; வீரர்களின் தீவிர பயிற்சி’ – Pre Match Photo Album | India vs England t20 Match 2025 practice session Photo Album

சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள்.Published:Today at 7 PMUpdated:Today at 7 PM நன்றி

சங்குப் பூ துவையல், பனை ஓலை கொழுக்கட்டை…விழுப்புரத்தில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி! | In Villupuram, Aval Vikatan Cooking super star show presented by Sakthi masala have started

முதல் போட்டி மதுரையிலும், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் நடைபெற்ற நிலையில் ஆறாவது போட்டி விழுப்புரம் ஆறுமுகம் மீனாட்சி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அரசூர், இளவனாசூர் கோட்டை, திருக்கோவிலூர், வளவனூர், கோலியனூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.   சமையல்…

இலங்கை: கலாசார மண்டபத்துக்கு ‘திருவள்ளுவர்’ பெயரை சூட்டியதால் சர்ச்சையா? – இந்தியா செய்தது என்ன?

பட மூலாதாரம், INDIAN HIGH COMMISSION IN COLOMBOபடக்குறிப்பு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம்கட்டுரை தகவல்இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்கான பெயர் சூட்டு நிகழ்வினால் எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்திற்கு ”திருவள்ளுவர் கலாசார மையம்” எனப் பெயர் சூட்டப்பட்டமைக்கே இவ்வாறு எதிர்ப்பு எழுந்திருந்தது. தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி என அரசியல்வாதிகள்…

தோனி, அஸ்வின், ஜடேஜாவின் அந்த அட்டகாச ஆட்டம் | நினைவிருக்கா? | about 2014 Indian team was on a tour of New Zealand match was explained

2014-ம் ஆண்டு இந்திய அணி நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தில் இருந்தது. இன்றைய தினமான 25-ம் தேதி அன்று ஆக்லாந்தில் நடந்த 3-வது ஒருநாள் பகலிரவுப் போட்டியை இந்திய அணி த்ரில் ‘டை’ செய்ததை மறக்க முடியுமா? அதுவும் கேப்டன் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா பின்னால் வந்து ஆடிய ஆட்டம் வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால் குறைந்தபட்சம் ‘டை’ செய்ய முடிந்தது. டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின்…

புகைச்சல்! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.விடிந்தால் போகிப் பண்டிகை.பொதுப் பணிகளையெல்லாம் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் கவுன்சிலர் கதிரேசன்.வழக்கமாக, “தாத்தா..!” என்று ஓடிவந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சும் பேத்தி சிந்து, இன்று கதிரேசனின் எதிரில் வரவில்லை. “காபி கொண்டாரட்டுங்களா..?” என்று கேட்டுக் கொண்டே வரும் மருமகளையும் காணோம்.‘ஒரு வேளை பேத்தி…

Ind Vs Eng : 'இரண்டாவது போட்டியிலாவது ஷமி ஆடுவாரா?' – களநிலவரம் என்ன?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடர் நடந்து வருகிறது. காயம் காரணமாக 13 மாதங்களாக இந்திய அணியில் ஆடாமல் இருந்த முகமது ஷமி இந்தத் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருந்தார். ஆனால், ஷமியை முதல் போட்டிக்கான ப்ளேயிங் லெவனிலேயே அணி நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியிலாவது ஷமி ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.கால் பாதங்கள் மற்றும் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாகத்தான் முகமது ஷமி இத்தனை…