பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?

Share

எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கம் ஏற்படுத்துமா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

சென்னை போன்ற நகரங்களில், கோடைக்காலம் என்பது நீண்ட வெப்ப அலைகள், அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, தொடர்ச்சியான தண்ணீர் பற்றாக்குறை குறித்த அச்சங்கள் எனத் தீவிரமான நிகழ்வுகள் நிறைந்த ஒரு பருவமாக மாறி வருகிறது.

தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ எனப்படும் ஒரு காலநிலை அமைப்பு உருவாகத் தொடங்கும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

வெகுதொலைவில் இருந்தாலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த நிகழ்வு சரியாக எப்படிச் செயல்படுகிறது? குறிப்பாக, தமிழ்நாட்டின் மீது இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

உலகளாவிய விளைவுகளைக் கொண்ட பசிபிக் மாற்றம்

எல்-நினோ என்பது கடல் மற்றும் வளிமண்டலத்தை உள்ளடக்கிய ஓர் இயற்கை சுழற்சியான எல்-நினோ-தெற்கு அலைவு (ENSO) எனப்படும் ஒரு பெரிய காலநிலை அமைப்பின் ஓர் அங்கமாகும்.

சாதாரண சூழ்நிலைகளில், ஆண்டு முழுவதும் கிழக்கிலிருந்து மேற்காகத் தொடர்ந்து ஒரே திசையில் வீசும் வர்த்தகக் காற்று (தொடர்ந்து நில நடுக்கோட்டை நோக்கியும் பின்னர் மேற்கு நோக்கித் திரும்பியும் வீசும் கடும் காற்று) வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் வெப்பமான மேற்பரப்பு நீரை மேற்கு நோக்கித் தள்ளுகின்றன. இது தென் அமெரிக்காவுக்கு அருகில் குறைந்த நீர் மேலே எழுவதற்கு அனுமதிக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com