Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்… பிரியாணியில் எது ஹெல்த்தி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் கணவர், மகன்கள் என எல்லோரும் பிரியாணி பிரியர்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்காவது பிரியாணி வேண்டும் அவர்களுக்கு. பெரும்பாலும் மட்டன் பிரியாணிதான் கேட்கிறார்கள். உண்மையில், பிரியாணியில் எது பெஸ்ட், எது ஆரோக்கியமானது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.அம்பிகா சேகர்பிரியாணி பிரியர்களைக் கேட்டால், மட்டன் பிரியாணிக்குத்தான் பெருவாரியான வாக்குகளைக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு பலருக்கும் ஃபேவரைட்டாக இருக்கிறது மட்டன் பிரியாணி. அதை சுவையாகவும் சமைக்க முடியும். சுவையில் சூப்பராக இருக்கும் மட்டன் பிரியாணி, ஆரோக்கியத்திலும் சிறப்பானதா என்பதுதான்…

“முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்’ படத்தை தடை செய்ய வேண்டும்” – வைகோ

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில சக்திகள் முயற்சித்து வருகின்றன.2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி…

மொஹாலி டூ மும்பை… வியக்க வைக்கும் அஸ்வனி குமாரின் வெற்றிப் பயணம்..! | Mohali to Mumbai Ashwani Kumar s amazing cricket journey to success ipl 2025

இந்த ஐபிஎல் சீசனில் முதல் 2 ஆட்டங்களையும் தோல்வியுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது போட்டியில் வெற்றியைச் சுவைத்து எதிரணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் இளம் வீரர் அஸ்வனி குமார். பஞ்சாபைச் சேர்ந்த இந்த இளம் வீரர்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை சிதறடித்து அணிக்கு வெற்றித் தேடித் தந்துள்ளார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது போட்டியில் மும்பை அணி…

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு: நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இறக்குமதி வரி தொடர்பான புதிய அறிவிப்புகள் வரவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி தொடர்பான அவரது அறிவிப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரிகள் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வருகின்றன?வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதிவேகமாக இந்த…

Dhoni: “தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்…” – கெயில் கூறுவது என்ன? | Chris Gayle spoke on fans retirement call on csk player ms dhoni

ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய கெயில், “ஐபிஎல்லுக்கு நிறைய மதிப்பைத் தோனி கொண்டு வந்திருக்கிறார். முடிந்தவரை அவரைப் பார்க்க வேண்டும், அவர் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.அவரை வெளியேற்ற விரும்பவில்லை. ஆனால், இது போன்ற கூச்சல்களை நீங்கள் கேட்கும்போது, ஒரு மிகப்பெரிய வீரரருக்கு மக்கள் மூலம் தவறான செய்தி அனுப்பக்கூடும்.கிறிஸ் கெயில்5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர், ஒருவேளை ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றால் ஐபிஎல்லின் மதிப்பு சற்று குறையும். தன்னுடைய அணிக்காக அவர் செய்திருப்பவை மிக…

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..’ – மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயிலில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்கள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், அம்மன் கோயில் விழாக்களுக்கும் அரசு சார்பில், அரிசி உள்ளிட்டவை வழங்க…

‘அவர் பேட் செய்ய வந்தால் மட்டும் போதும்’ – தோனி குறித்து கிறிஸ் கெயில் கருத்து | Its enough for me if dhoni comes to bat says Chris Gayle ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் தோனி மிகவும் லேட்டாக களம் காண்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அது குறித்து தனது கருத்தை முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார். “ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்து உள்ளது. அவரால் முடிகின்ற வரையில் விளையாடலாம். தலைசிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும்…

வரிக்கு பதிலடியாக வரி – டிரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவில் என்ன மாற்றம் நிகழும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் “அனைத்து நாடுகள்” மீதும் புதன்கிழமை (ஏப். 02) முதல் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாளை, அமெரிக்காவின் ‘விடுதலை நாள்’ என வர்ணித்துள்ளார் டிரம்ப்.ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி (சுங்க வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த பரஸ்பர விதி நடைமுறைக்கு வரவுள்ளது.இதனால்,…

MI : ‘பும்ரா டு அஸ்வனி குமார்!’ – மும்பை மட்டும் எப்படி உள்ளூர் திறமைகளை அள்ளி வருகிறது?

‘பும்ரா டு அஸ்வனி குமார்!’Scouting குழுவின் வேலை இதுதான். இப்படி ‘Scouting’ குழுவை வைத்து இளம் வீரர்களை தேடிப்பிடிக்கும் வேலையை மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதோ தொடங்கி விட்டது. பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா போன்ற ஸ்டார் வீரர்களையே மும்பை அணி தங்களின் ‘Scouting’ குழு வழியாகத்தான் கண்டறிந்து அணிக்குள் கொண்டு வந்தது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜான் ரைட் தான் மும்பை அணியின் திறன் தேடும் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.அப்போது ஒரு…

புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை – வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

அதேபோல பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் டீசல் மட்டுமல்ல வரிகளும் குறைவுதான். ஆனால் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போக்குவரத்துத் துறைக்கு கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத் துறை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை. இந்தியா முழுவதும் அனுமதிக்கப்படும் இப்படியான சவாரி நிறுவனங்களுக்கு, புதுச்சேரியில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் ? சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, பைக் டாக்ஸியில் பயன்படுத்துகிறார்கள்…