"இலவு காத்த கிளி போல எடப்பாடி காத்துக்கொண்டிருந்தார்" – விமர்சனத்திற்குத் திருமாவளவன் பதில்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிச்சாமிதொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனிடம், “கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நிர்பந்தத்தின் பேரில்தான் தி.மு.க-வில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணி கட்சிகள்…









