கிளென் பிலிப்ஸ் காட்டடி: பாகிஸ்தானை ஒருநாள் தொடரில் வென்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்து சாதனை
கராச்சியில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. 2008-ம் ஆண்டிற்குப் பிறகு துணைக்கண்டத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது நியூஸிலாந்து. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்குத் திரும்பிய தொடக்க இடது கை வீரர் ஃபகர் ஜமானின் 101 ரன்கள் சதம் மூலம், ரிஸ்வானின் 77…








