Browsing: அரசியல்

அதிமுக என்ற ரயிலில் ஏறுபவர்கள் ஏறலாம், இறங்குபவர்கள் இறங்கலாம்: வைகைச்செல்வன் பேட்டி

குடியாத்தம்: அதிமுக என்ற ரயில் ஓடி கொண்டே தான் இருக்கும். அதில் ஏறுபவர்கள் ஏறலாம், இறங்குபவர்கள் இறங்கலாம் என குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நிருபர்களிடம் கூறிதாவது: எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்து சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்பது தான் மரபு. அதிமுக மிக பெரிய கட்டமைப்பு. ஒருவர், இருவர் செல்வதால் கட்சி சிதிலமடையாது. அதிமுக என்ற ரயில் ஓடிக்கொண்டே தான் இருக்கும். ஏறுபவர்கள்…

எங்கும், எதிலும் இந்தி? தமிழகம் அனுமதிக்காது: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை: ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகிவிட்டது. இதனை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச்சட்ட குழுவினர் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், 11வது தொகுப்பில், இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒன்றிய அரசு அலுவலகங்களில் இனிமேல் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேற்று விடுத்துள்ள…

சேலம் அருகே பரபரப்பு பேட்டி; ரூ41 ஆயிரம் கோடி ரகசியம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஓமலூர்: ரூ41 ஆயிரம் கோடி ரகசியம் பற்றி சேலம் அருகே ஓமலூரில் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேட்டியளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். இந்த வழக்கில் உள்ளவர்கள்…

சென்னையில் இன்று பொதுக்குழு கூட்டம்: திமுக தலைவராக 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்கிறார்

* பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது*  சென்னையில் கட்சித் தொண்டர்கள் குவிந்தனர்சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை நடக்கிறது. இதில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக பதவியேற்கிறார். பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. திமுகவின் 15வது அமைப்பு தேர்தலை முன்னிட்டு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்-கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் தேர்தல் நடந்தது. தொடர்ந்து புதிய…

சொல்லிட்டாங்க…

ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கைபடி, இந்தியை திணிப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபடுகிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஇலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- ஒன்றிய அமைச்சர் பருஷோத்தம் ரூபாலாஇந்துத்துவ கருத்துகளை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்துவிட வேண்டும் என துடிக்கும் சங்பரிவார் இயக்கங்களுக்கு துணையாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோபட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு…

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

சென்னை: ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சர்வாதிகாரத்தோடு நடக்ககூடாதென எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். Source link

வருகிற 17, 20 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: `அதிமுக’ பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 17.10.2022 அன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, வருகிற 17, 20 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள், ‘அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற…

காங்.கில் இருந்து விலகிய எம்எல்ஏ இரண்டே நாளில் பாஜ.வுக்கு தாவல்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் கால கட்சி தாவல்களும் அதிகரித்து வருகிறது. ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள விசவதார் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஷத் ரிபாடியா. இவர், படிதார் சமூக மக்களின் தலைவராக உள்ளார். கடந்த செவ்வாயன்று ஹர்ஷத் தனது காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று அவர் பாஜ.வில் இணைந்தார். காந்திநகரில் உள்ள பாஜ தலைமையகத்தில் மாநில பாஜ பொது செயலாளர் பிரதீப்சின் வகேலா…

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து விரிவுரையாளர்களை நீக்கக்கூடாது: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 1,311 பேர் பணியில் இருந்து ஒட்டுமொத்தமாக அண்மையில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கத்தை எதிர்த்து நாளை (இன்று) முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று வேலையை…

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் ஆதரவு திரட்டினார்

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை…

1 82 83 84 85 86 161