Browsing: அரசியல்

துணைவேந்தர் பதவி விவகாரம் தமிழக அரசு விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: பஞ்சாப் ஆளுநர் புகாரை தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன் பேச்சில், ‘‘தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூபாய் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு…

இந்திய கடற்படையே இந்திய மீனவர்களை தாக்குவதா? தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி கண்டனம்

சென்னை: இந்தியக் கடற்படையே இந்திய மீனவர்களைத் தாக்குவதா என்று தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: இருதினங்களுக்கு முன் இந்தியக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களைப் பாதிக்காமல், படகை நோக்கி சுடாமல், எச்சரிக்கை செய்ய சுட்டிருக்கலாம். அதை விடுத்து குறி பார்த்து மீனவர்களை சுடுவது எப்படி எச்சரிக்கை செய்வதாக அமையும். இதற்கு ஒன்றிய மோடி அரசு முழு பொறுப்பை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம், காலத்துக்கும் அழியாத ஒரு பழியை தமிழகத்துக்கு ஏற்படுத்தி விட்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நாம் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற ஒரு சம்பவத்தை நாம் வாழும் காலத்தில் கண்முன்னே கண்டது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. உண்மையில் யார் தவறு…

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். காந்தியப் பாதையில் நாட்டின் நல்லிணக்கத்துக்கான அவரது பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடரட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரானது அல்ல: பிறந்த நாள் விழா கருத்தரங்கில் கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோதியா, தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, தமிழக சிறுபான்மை ஆணயை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, அசன் மவுலானா எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஆருண்,…

துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை வெளியான பிறகும் எடப்பாடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? அதிமுக மாஜி எம்எல்ஏ கேள்வி

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசு அமைத்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஆறு நாட்களாகியும் எடப்பாடி வாய் திறக்காமல் மவுன விரதம் இருக்கிறார். 100 நாட்களாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை அமைதி வழியில் தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உள்பட 13 பேரை சுட்டுக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதுபற்றி எடப்பாடி பழனிசாமி…

துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் ஆளுநரையே சாரும்: மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தர்மபுரி: துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அது ஆளுநரையே சாரும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார். முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கேபி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி: பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார்.…

கட்சி நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டம் இரண்டாக பிரிப்பு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்சியின் நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டத்தை இரண்டாக பிரித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காகவும்- கட்சி பணிகள் செம்மையாக நடைபெறவும், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒன்றிய, நகர கழகங்கள் பின்வருமாறு அமையும். தென்காசி வடக்கு மாவட்டம்- சங்கரன் கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளை அடங்கியதாக அமையும். இதில்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால் இந்தியாவில் திமுகவை வியந்து பார்க்கின்றனர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால் இந்தியாவில் திமுகவை வியந்து பார்க்கின்றனர் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வரவேற்றார். கருத்தரங்கை டி.ஆர்.பாலு எம்பி.,…

வெள்ள நீர் வடிகால்கள் இணைப்பு பணிகளை உடனே முடிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் பணிகள் நிறைவடையவில்லை. மழைநீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் முடிந்து விட்டதாக மேயரும், 70 சதவீதம் நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும் கூட, பெரும்பான்மையான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. இன்னும் பல இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவர்களும், மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழைநீர்…

1 75 76 77 78 79 161