Browsing: அரசியல்

முட்டிபோட்டு சென்று மனு அளித்த 12 காங். கவுன்சிலர்கள்: பிரதமர் மோடி தொகுதியில் பரிதாபம்

வாரணாசி: சிக்ரா நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்காக முட்டிபோட்டு ஊர்ந்து வந்து 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி எம்பி தொகுதிக்கு (பிரதமர் மோடியின் தொகுதி) உட்பட சிக்ரா நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டிபோட்டு ஊர்ந்து வந்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டில் மட்டும் எங்களது பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம்…

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், ரகு, இளையராஜா, அடிபுள் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். Source link

தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: சமூக வலைதளத்தில் சர்ச்சை பதிவு; அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் நடவடிக்கை

சென்னை: தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தள பதிவு, அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜவில் இணைந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராமுக்கு உடனடியாக கலை, கலாசார பிரிவில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதல் பெறாமல், கலை, கலாசார பிரிவில் நிர்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்தார். சிறிது…

சொல்லிட்டாங்க…

நாட்டில் 30 லட்சம் வேலைகள் காலியாக இருக்கும் நிலையில் மோடி வழங்கிய 71 ஆயிரம் பணி நியமனம் மிகவும் குறைவு. :- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே50 ஆண்டுகளாக சுரண்டி என்.எல்.சி., இப்போது அக்கறை காட்டுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். :- பாமக தலைவர் அன்புமணிபுளூ டிக் சேவை தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அடையாள நிறங்கள் வழங்கப்படும். :- டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்உலகம் முழுவதும் ஒவ்வொரு 11 நிமிடத்துக்கு ஒரு பெண்…

ஆபாச பேச்சை தட்டிக் கேட்டதால் கட்சியில் இருந்து நீக்குவதா?.. காயத்ரி ரகுராம் ஆவேசம்..!

சென்னை: அண்ணாமலை கூறுவதை ஏற்க முடியாது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில…

இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்: காயத்ரி ரகுராம் ட்வீட்

சென்னை: இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். வெளிநாடு வாழ் மற்றும் அண்டை…

திருநாவுக்கரசர் எம்பி உறுதி திமுக-காங்கிரஸ் கூட்டணி நன்றாக இருக்கிறது

சென்னை: காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது அல்லது தற்போதுள்ள தலைவரை மாற்றுவது பற்றி மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் டெல்லி போய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை பார்த்திருக்கிறார்கள். தற்போதுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர், தலைவராகி 4 வருஷத்துக்கு மேல் ஆகி விட்டது. சில மாற்று கருத்துகள் இருக்கலாம். அதுபேசி தீர்க்கப்படும். புதிய…

பிரதமரின் கிசான் திட்டத்தில் ஒவ்வொரு தவணைக்கும் பயனாளிகள் குறைகின்றனர்: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 3 தவணை வழங்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘உணவு வழங்கும் மக்களின் உரிமையை பறிப்பது தான் மோடி அரசின் கொள்கையாகும். பிரதமரின் கிசான் திட்டத்தின் முதல் தவணை கடந்த 2019ம் ஆண்டு வழங்கப்பட்ட போதிலிருந்து தற்போது 67…

சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, மோதல் கே.எஸ்.அழகிரி மீது கார்கேவிடம் புகார்: இளங்கோவன் உள்ளிட்ட 4 தலைவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, மோதல், மண்டை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் தலைவர்கள் டெல்லியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு அவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டவர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டும் என்று மேலிடம் அறிவித்திருந்த நிலையில், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில்…

தமிழ்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் மோடி: செங்கை பத்மநாபன் பாராட்டு

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரபிரதேசத்தின் காசி வாரணாசிக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்ட கால பாரம்பரிய கலாசார தொடர்பை புதுப்பிக்க காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமரை வெகுவாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அவரை உற்சாகப்படுத்துவதற்கு மாறாக, தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரானவர் போல சித்தரிப்பது தவறு. விமர்சனம் என்பது நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே உள்ளது. தமிழ் மொழி மிகுந்த வலிமையுடன் எழுச்சியுடன் பூர்வீக பெருமையுடன் உலக மொழிகளில்…

1 61 62 63 64 65 161