Browsing: அரசியல்

பீகாரில் உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு சுறுசுறுப்பு

பாட்னா: பீகாரில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சுறுசுறுப்பாக நடந்தது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான பீகாரின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்றும் (டிச. 18), வரும் 28ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை வரும் 20ம் தேதியும், இரண்டாம்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு தலைவலியாக மாறிய 350 எம்பி தொகுதிகள்: காங்கிரசை காட்டிலும் மாநில கட்சிகளின் பலம் அதிகமானதால் தவிப்பு

புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தலைவலி கொடுக்கும் வகையில் 350 எம்பி தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் காங்கிரசை காட்டிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால் அவை பாஜக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் அடுத்தாண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநில தேர்தல் முடிவுகள் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.…

மதசார்பின்மைக்கு எதிராக பேசுகிறார் ஆளுநர்: முத்தரசன் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே புத்தூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், பாஜ இல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒன்றிய அரசு தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஆளுநர்களை நியமித்து இடையூறுகளை ஏற்படுத்தி போட்டி அரசை நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஆர்என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்தவில்லை. மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக பேசுகிறார். இந்தியா இந்து மதத்தை சார்ந்த…

சொல்லிட்டாங்க…

* இந்திய எல்லை பகுதிகள் பாதுகாப்பில் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா* சீனா போர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கிறது. – ஒன்றிய அமைச்சர் கிரண் ரஜிஜூ* புதுச்சேரி வளர்ச்சிக்காக, மக்களுக்காக தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும். இந்த நிர்வாகத்தில் தினந்தோறும் மன உளைச்சலாகத்தான் உள்ளது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி* வரும் 2024க்கான தேர்தல் மோடிக்கான தேர்தல்.…

முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என நேரு எம்எல்ஏ தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. இதற்கு மத்திய அரசு, தலைமை செயலர் மற்றும் செயலர்கள்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டி இருக்கிறார். 2011ல் மாநில அந்தஸ்து பெறுவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள்.  2021ம் ஆண்டு…

பாஜக – திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சென்னை: பாஜக – திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் அதிருப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன்  தெரிவித்துள்ளார். காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என சி.வி.சண்முகம் பேசியது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். Source link

தெ.தேசம்-ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் மோதல்; கட்சி அலுவலகம், வீடுகள் தீ வைத்து எரிப்பு: 144 தடை உத்தரவு அமல்

திருமலை: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் ‘இதி ஏமி கர்மா ராஷ்டிரம்’ எனும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரிங் ரோட்டில் வீதிவீதியாக சென்று, ‘ஜெகன்மோகன் அரசால் மாநிலம் பின்தங்கியதாகவும், எந்தவித வளர்ச்சியும் இல்லை’ என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். உடனே ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் திரண்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம்…

‘கண்ணகி கோயில் கேரளாவுக்கு சொந்தம்’ அதிமுக எம்.பி சர்ச்சை பேச்சால் தென்மாவட்ட மக்கள் கொதிப்பு

தேனி: நாடாளுமன்றத்தில் கண்ணகி கோயில் கேரளாவிற்கு சொந்தமானது என அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசிய பேச்சால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத், நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, ‘‘கேரள எல்லைக்குள் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் பராமரிப்பின்றி உள்ளது. இக்கோயிலை ஒன்றிய அரசு பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னமாக அறிவித்து ஒன்றிய அரசின் பிரசாத் திட்டத்தில் சேர்த்து நிதி ஒதுக்கி, வருடத்தின் அனைத்து நாட்களிலும்…

அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் சிறுபான்மையினர் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்: பீட்டர் அல்போன்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். சிறுபான்மையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்தில் கூறியுள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், ‘தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளினை’ வரும் 18ம்தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்…

எஸ்டி பட்டியலில் நரிக்குறவர்கள் பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு, ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. நீண்டகால கோரிக்கையை ஏற்று, நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு தமாகா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு சட்ட ரீதியாக உரிய அங்கீகாரம் சலுகைகள் கிடைத்த போதிலும், அவற்றை…

1 49 50 51 52 53 161