Browsing: அரசியல்

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அணிகளில் ஓபிஎஸ்சுக்கு தனியரசு ஆதரவு: பொதுச்செயலாளராக வந்தால் அதிமுகவுக்கு ஆபத்து

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் 2 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. இவர், கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேற்று வந்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் வெளியில் வந்த…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகாவே போட்டியா?.. எடப்பாடி பழனிசாமி முடிவால் பரபரப்பு

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்குகிறார். அதிமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட தமாகா விலகி கொள்ள அதிமுகவே போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இரு அணியினரும் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளை இருதரப்பினர் போட்டி போட்டு சந்தித்து ஆதரவை திரட்டினர்.…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து புகார்களை தெரிவிக்க எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 3 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை கீழ்கண்ட 6 குழுக்களிடமும் தொடர்பு கொண்டு…

யாராவது நில்லுங்கப்பா கெஞ்சும் எடப்பாடி: செலவுகளை ஏற்பதாக ஆசை வார்த்தை; 18 மாஜி மந்திரிகளுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், அடுத்த மாதம் 27ம்தேதி நடக்கிறது. திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஒ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக கூறி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் போட்டியிட யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கவே கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியினர் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில், வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? இரட்டை இலை…

திமுக இளைஞர் அணி பதவிக்கான நிர்வாகிகளுடன் நேர்காணல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது

சென்னை: திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை பொறுப்புக்கான நேர்காணல் மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அன்பகத்தில் நேற்று நடந்தது. திமுக பொதுக்குழுவுக்கு பிறகு ஒவ்ெவாரு அணிகளிலும் மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக நியமிக்கப்பட்டார். இதன் ஒரு பகுதியாக திமுக இளைஞர் அணியில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு அனைத்து…

சொல்லிட்டாங்க…

* எடப்பாடி தாமாகவே முன் வந்து தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். மறுபடியும் அவர் உரிமையை அவர் கோர முடியாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* மோடி அரசு நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை வழக்கறிஞர்கள் நம்பமாட்டோம். காங்கிரஸ் எம்பி கபில் சிபல்* ரா, உளவு பிரிவின் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பகிரங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு* ஈரோடு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்; பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் தமிழக பாரதிய ஜனதா சிறப்பாக இயங்குகிறது என ரவி பச்சமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். Source link

சின்னம் கிடைக்காததால் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்: வேட்பாளர்கள் கிடைக்காமல் இரு அணியினரும் திணறல்.!

சென்னை: கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு அணியிலும் வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளன. அதில் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகின்றனர். 3 பேரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையில்…

இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ‘புல்லட்’ சின்னம் கேட்கும் எடப்பாடி அணி: தேர்தல் களத்தில் பரபரப்பு

சென்னை: இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லாததால் ‘புல்லட்’ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அணி வேட்பாளர் யார்? ஓபிஎஸ் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில்…

1 31 32 33 34 35 161