ஆளுநர் செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
திருவாரூர்: ஆளுநர் ரவி, தனது தரம் தாழ்ந்த பேச்சுக்களை நிறுத்தி கொள்ளாவிட்டால், அவர் செல்லும் இடமெல்லாம் தொடர் போராட்டம் நடத்தப்படும் என முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுடன் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை பாஜ கிளை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். ஜன சங்க தலைவர் எழுதிய புத்தகத்தை…









