Browsing: அரசியல்

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி அறிக்கை..!

சென்னை: பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள்.கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை…

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அன்புமணி ராமதாஸ் சந்தித்து, பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார். பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணிக்கு கவுரவ தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது…

கவுரவ தலைவரானார் ஜி.கே.மணி பாமக புதிய தலைவராக அன்புமணி தேர்வு

சென்னை: திருவேற்காட்டில் நேற்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணி கவுரவ தலைவரானார். அவர்களுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பாமக தலைவர் பதவியில் ஜி.கே.மணி 25 ஆண்டுகள் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பாராட்டு விழா சென்னையில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போதே அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஜி.கே.மணி, பாமக சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் 28ம்தேதி கூட்டப்படும் என்ற…

சொல்லிட்டாங்க…

பாஜவின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு தலைகுனிவு ஏற்படக்கூடிய எந்த செயலையும் நாங்கள் செய்யவில்லை. :- பிரதமர் மோடிகாங்கிரஸ் ஆட்சியில் விட்டுக் கொடுத்த பல உரிமைகள் பாஜ தலைமையிலான ஆட்சியில் மீட்கப்பட்டு வருகிறது. இதுதான் நேருவுக்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம். :- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைஒரு மாநிலத்துக்கு பிரதமர் செல்லும்போது அவரிடம் முதல்வர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். இதை பெரிதுபடுத்தி பாஜவை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். :- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிபாஜ தலைவர்…

கொலை நகரமாக புதுச்சேரி மாறிவிட்டது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி அரசு மின் விநியோகத்தை தனியார் மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெளிவாக இருக்கிறது.புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறோரா, அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிடும். மக்களுக்கு…

மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. திமுக ,அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. திமுக கூட்டனியில் இருக்கும் காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அதை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 12 பேர் தங்களது டெல்லி செல்வாக்கை வைத்து, அந்த ஒற்றை இடத்தை பெறுவதற்கு கட்சி தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ்…

ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்

திருமலை: ‘இனிதான் பாஜ.வின் ஆட்டம் ஆரம்பமாகிறது. தெலங்கானாவில் அடுத்தது பாஜ ஆட்சிதான் அமையும்,’ என்று ஐதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையம் வந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, மாநில முதல்வர் சந்திர சேகர ராவுக்கு பதிலாக…

இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது: எம்.பி. தயாநிதி மாறன்

சென்னை: இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது என்று எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம்,குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு அதிகப்படியான திட்டங்களை வழங்குகிறது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். Source link

2024 தேர்தலின் புதிய ஆயுதம்: மீண்டும் இந்தி தீ!..டெல்லியில் காய் நகர்த்தும் பாஜ

‘பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக…

சொல்லிட்டாங்க…

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான். :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். :- பிரதமர் மோடிகடந்த 2014ம் ஆண்டுக்கு பின்பு நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருவதால் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது இருந்து வருகிறது. :- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழ்மொழியை பிரபலப்படுத்த கடும் முயற்சிகளை…

1 145 146 147 148 149 161