Browsing: அரசியல்

‘தருமம் மறுபடியும் வெல்லும்’… அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!!

சென்னை :  ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச்…

கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி ஒன்றிய அரசை கண்டித்தும், அறவழியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய புதுடெல்லி காவல்துறையை கண்டித்தும் கும்மிடிப்பூண்டி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான மதன்மோகன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவர் பிரேம் குமார்…

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.  அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு…

பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது: ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். அந்த மனுவில்; அதிமுக செயற் குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் எதிர்வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள்…

அக்னிபாத் திட்டம்… ராணுவ வீரர்களை தயாரிப்பது நாட்டைப் பாதுகாக்கவா? பாஜகவுக்கு ஆள் எடுக்கவா? : பிரதமர் மோடி மீது திமுக முரசொலி அட்டாக்

சென்னை: மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையான அக்னிபாத் திட்டமானது பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் திட்டமா? என்று  திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக முரசொலி தலையங்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னாள்ராணுவ அதிகாரிகளின் கடுமையான எதிர்ப்புக்கும் ஆளாகி இருக்கிறதுஅந்தத் திட்டம். இத்தகைய சூழலில் வந்துள்ள விமர்சனங்களை மனதில் வைத்து அந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.…

அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு

சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் மாவட்ட செயலாளர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில் அவை தேசத்தை கட்டி எழுப்பும்.- பிரதமர் மோடிஅக்னிபாதை திட்டத்தின் மூலமாக தனக்கென பிரத்யேக ஆயுத படைப்பிரிவை உருவாக்குவதற்கு பாஜ திட்டமிட்டுள்ளது.- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிசீனா, பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது இருமுனை தாக்குதல் நடத்தலாம். அதை முறியடிக்க அற்புதமான திட்டம் அக்னிபாத்.- பாஜ மாநில தலைவர் அண்ணாமலைதேசிய அளவில் 3வது அணி கூடாது. தேர்தலில் பாஜவை தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட…

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்கும் ஒற்றை தலைமையாக எடப்பாடி வருவார்: பாண்டியன் எம்எல்ஏ பேச்சு

சிதம்பரம்: அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகரம், கிள்ளை பேருர் கழகத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடு வழங்குதல் மற்றும் கட்சி வளர்ச்சி ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான பாண்டியன் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மற்றும் மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் இதில்…

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக 7வது நாளாக ஆலோசனை

சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக  ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக 7வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஈபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். Source link

1 134 135 136 137 138 161