Browsing: செய்திகள்

chennai high court order creats crisis for o panneer selvam | ஓ.பன்னீர் செல்வத்துக்கு 82 கோடி ரூபாய் வரி

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82.12 கோடி ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசில் மேல்…

கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றம்  நாளை தீர்ப்பளிக்கிறது.  இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி விஜய் வழக்கு பதிவு செய்தார். Source link

Chiyaan 61 Exclusive: அடுத்த கட்டத்துக்கு நகரும் படம்; பா.ரஞ்சித் – விக்ரம் படத்தின் அப்டேட் |pa.ranjith- vikram movie latest update

சரி விஷயத்துக்கு வருவோம். பா.ரஞ்சித்- விக்ரம் கூட்டணியில் உருவாக உள்ள படத்துக்கான லொகேஷன் தேடல் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. கிபி 17ம் நூற்றாண்டின் கதைக்களம் அது. எனவே அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இடங்களைத் தேடி பா.ரஞ்சித்தின் உதவியாளர்கள் லொகேஷன் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ரஞ்சித்தும் பெங்களூரு சென்று வந்தார். கேரளா, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள லொகேஷன்கள் எதுவும் திருப்தி தரவில்லை என்பதால் திருவண்ணாமலை பக்கம் தேடி வருகின்றனர். ரஞ்சித், விக்ரம், ஞானவேல்ராஜாஇந்நிலையில் படத்திற்கான…

இலங்கை போராட்டத்தில் ஒருவர் பலி, 84 பேர் காயம்: போராட்டக்காரர்கள் எடுத்த புது முடிவு

11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதில் சிக்கி மூச்சுத் திணறிய ஒரு போராட்டக்காரர் மருத்துவமனையில் இறந்தார். 84 பேர் காயமடைந்தனர்.இதனிடையே, இலங்கையில் போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். கொழும்புவில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள்…

அறிவியல் வகுப்பில் ஆபாச வார்த்தைகள்.. கரூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

கரூரில் அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசியதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டம், பாகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இங்கு அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களின் பாலியல்…

இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது: ஐகோர்ட் கிளை

மதுரை: இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர், தேர்வுக்குழுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. Source link

உ.பி: பாலியல் தொல்லை; ஓடும் காரிலிருந்து கீழே குதித்து காயமடைந்த இளம்பெண் – ஹோட்டல் உரிமையாளர் கைது! | Girl jumps off moving SUV to escape molestation; sustains injuries

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஒருவர் தன் மருமகளுடன் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த புதன்கிழமை 21 வயது பெண் ஒருவர் அந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஹோட்டல் வேலை முடிந்து அந்தப் பெண் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் அந்தப் பெண்ணை தன்னுடன் காரில் வருமாறும், வீட்டில் விட்டுவிடுவதாகவும் கூறி வற்புறுத்தியுள்ளார். அதனால் அந்தப் பெண்ணும் காரில் ஏறியுள்ளார்.பாலியல் தொல்லைசித்திரிப்புப் படம்கார் நகரத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹோட்டல் உரிமையாளர்…

ரணில் தொலைக்காட்சி உரை: ‘ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்’

36 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”நாம் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய முடியாது.…

Army helicopter crash defence minister submit report in parliament

முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் செய்து ஆய்வு…

ஜூலை-13: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

1 490 491 492 493 494 529