“ஈழத்தமிழர் விவகாரத்தில் 'வொர்ஸ்ட் நாடகம்' ஆடுகிறது பாஜக!" – சீமான்
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்றுத்துயர சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே-18ம் தேதி உலகெங்கும் வாழும் தமிழர்கள் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏந்தி நினைவேந்தல் நடத்துகின்றனர். அந்த வகையில் தீவிர ஈழ ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியும் ஆண்டுதோறும் மே-18ம் தேதி `இன எழுச்சி பொதுக்கூட்டத்தை’ நடத்திவருகிறது. இந்த நிலையில், 13-வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு, இன்று சென்னை பூவிருந்தவல்லியில்…









