Browsing: செய்திகள்

“ஈழத்தமிழர் விவகாரத்தில் 'வொர்ஸ்ட் நாடகம்' ஆடுகிறது பாஜக!" – சீமான்

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்றுத்துயர சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே-18ம் தேதி உலகெங்கும் வாழும் தமிழர்கள் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏந்தி நினைவேந்தல் நடத்துகின்றனர். அந்த வகையில் தீவிர ஈழ ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியும் ஆண்டுதோறும் மே-18ம் தேதி `இன எழுச்சி பொதுக்கூட்டத்தை’ நடத்திவருகிறது. இந்த நிலையில், 13-வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு, இன்று சென்னை பூவிருந்தவல்லியில்…

யார் இந்த பேரறிவாளன்? – முழு வரலாறு

யார் இந்த பேரறிவாளன்? – முழு வரலாறுஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்கு பேட்டரி வாங்கித்தந்ததாகக் கூறப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். Source link

அன்று கோட்சே.. இன்று பேரறிவாளன்.. தமிழக காங்கிரஸ் எம்.பி. காட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர், பேரறிவாளனை கோட்சேவையும் ஒப்பிட்டு ட்விட் செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை…

பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது: சசிகலா

சென்னை: பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். அன்று அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார் எனவும் கூறினார். Source link

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு ப்ளீடிங்; சாதாரணம்தானா?

என் வயது 57. பீரியட்ஸ் நின்று ஒன்றரை வருடம் ஆகிறது. இந்நிலையில் இப்போது திடீரென ரத்தப்போக்கு இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? என்ன டெஸ்ட் செய்ய வேண்டும்?- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)ஹெப்ஸிபா கிருபாமணிபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.“57 வயதில், மாதவிடாய் நின்று மெனோபாஸ் வந்தபிறகு இருப்பதாகச் சொல்லப்படும் ரத்தப்போக்கு ஆபத்தான ஓர் அறிகுறி. 50 வயதுக்கு மேல் ஒரு வருடத்துக்கு, அதாவது தொடர்ந்து 12 மாதங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால்…

‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்: “மாமன்னன்’ படத்திற்கு பிறகு நடிப்பேனா என தெரியவில்லை”

ச.ஆனந்தப்பிரியாபிபிசி தமிழுக்காக7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், PRO IMAGESபடக்குறிப்பு, அருண்ராஜா காமராஜ் உடன் உதயநிதிசட்டமன்ற உறுப்பினர், நடிகர் என இரண்டு தளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இந்த வாரம் 20ம் தேதி ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் இந்தியில் வெளியாகி பல விவாதங்களை ஏற்படுத்தியது.தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’யாக தமிழில் வெளியாகிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படப்பிடிப்புக்காக…

ரூட்டு தல தாக்குதல் விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுத தடை சட்டம் உட்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது

ரூட்டு தல விவகாரத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இரண்டு மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் ஆயுத தடை சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், நேற்று காலை அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், பின்னர் சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். Source link

புதுக்கோட்டை: வாகனச் சோதனையில் சிக்கிய 1.25 கிலோ கஞ்சா – எஸ்.ஐ மகன் உட்பட 5 பேர் கைது! | more than one kg of cannabis was seized and police arrested 5 youngsters including si son

புதுக்கோட்டை மாவட்டம், குன்னம்வயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்தப் பகுதி வழியாக டூவிலரில்வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கின்றனர். அதனால் சந்தேகமடைந்த போலீஸார், டூவீலர் டேங்க் கவரை சோதனையிட்டுப் பார்த்தனர். டேங்க் கவருக்குள் சுமார் 25 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, உடனே மூன்று பேரையும் திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், டூவீலரில் வந்தவர்கள்…

இலங்கை நெருக்கடியும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்: மே 18-இல் தாக்குதல் நடத்தத் திட்டமா? – கள நிலவரம் என்ன?

எம். மணிகண்டன்பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பெரிய அளவிலான போராட்டங்கள் என இலங்கை ஒரு திசையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இறுதிப் போர் படுகொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான செய்தி வேறொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.ஆனால் இந்தச் செய்திக்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுகின்றன. இங்கு இப்போது கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது.உப்பு, நீர், அரிசி ஆகியவற்றை மட்டும்…

1 445 446 447 448 449 457