ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கும் ஒய்பிளஸ் பாதுகாப்பு – அணி மாறுவதை தடுக்கும் யுக்தியா?! | YPlus protection for 41 pro-Shinde MLAs in Maharashtra
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு முற்றிலுமாக விலக்கிக்கொண்டது. ஒரு சில எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் தோரட், “அரசு இப்போது ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த அடுத்த…









