அஸ்ஸாம் வெள்ளம்: ஆய்வுக்கு வந்த முதல்வர்… கழுத்தளவு நீரில் இறங்கி சால்வை வழங்கிய இளைஞர்! | Man rushes through neck-deep water to greet CM Himanta Biswa Sarma
அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் பிற அவசரகால உதவிகளுக்காக மாநில அரசு அவசர உதவி எண் அறிவித்திருக்கிறது. அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, “அஸ்ஸாமின் மோரிகான் மாவட்டத்தில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர். சனிக்கிழமையன்று இறப்பு எண்ணிக்கை 121-ஆக உயர்ந்துள்ளது” என…






