பஹல்காம் தாக்குதல் வழக்கில் தகர்க்கப்படும் வீடுகள் – மக்களை தனிமைப்படுத்த வேண்டாம் என காஷ்மீர் முதலமைச்சர் கோரிக்கை
படக்குறிப்பு, அடிலின் குடும்பத்தினர் தங்கள் வீட்டை ராணுவமும், காவல்துறையும் இடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.கட்டுரை தகவல்எழுதியவர், மஜித் ஜஹாங்கிர்பதவி, 28 ஏப்ரல் 2025, 10:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர்.ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்துக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் இந்த நடவடிக்கை பெரிய அளவில்…









