இரவில் நகைக்கடையில் திருடி விட்டு குடிபோதையில் கழுதையில் ஏறி தப்பிச்சென்ற நபர் | Man steals from a jewelry store at night and escapes on a donkey while drunk-
துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்று இருந்தார். இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம…









