அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடர். எனவே அவர் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பிலிருக்கிறார். ஏற்கெனவே தனது கடைசி கோபா அமெரிக்க தொடரில் கோப்பையை வென்று, ஒரு சாதனையைக் கைவசப்படுத்தியிருக்கிறார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிர்ச்சிகரமாக சவூதி அரேபியாவிடம் தோற்றிருந்தாலும், அதன் பிறகான ஆட்டங்களில் சுதாரித்துக்கொண்ட அர்ஜெண்டினா அணி, தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை கோப்பையை வென்றிடாவிட்டாலும், களத்தில் வெல்வதற்கு மிகக் கடுமையான அணியான நெதர்லாந்து இன்னொரு பக்கம் களமிறங்கியது. நெதர்லாந்து தடுப்பாட்டத்துக்குப் பெயர் போனது என்றாலும் அர்ஜெண்டினா ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியது.
அவர் வருங்காலத்தில், “நான் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸியிடமிருந்து பந்தைப் பெற்று, அர்ஜெண்டினாவுக்காகக் கோலடித்திருக்கிறேன்” என்று தன் பேரப் பிள்ளைகளிடம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் என்றார் கமெண்டேட்டர். கால்பந்து விளையாட்டு என்பது தென்னமெரிக்க நாடுகளில் ஒரு தீவிரமான மதம் போல கருதப்படுகிறது என்பதற்கு அவரது வார்த்தைகள் ஒரு உதாரணம். அர்ஜெண்டினாவைப் பொறுத்தவரை அவர்களது கால்பந்து மதத்தில் மரடோனாவுக்குப் பிறகான தெய்வமல்லவா லயனல் மெஸ்ஸி? நெதர்லாந்து வீரர்கள் அர்ஜெண்டினாவின் பெனால்டி ஏரியாவுக்குள் அதிரடியாக நுழைந்து சில வாய்ப்புகளை ஏற்படுத்தினார்கள் என்றாலும் அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் சிறப்பாகச் செயல்பட்டு அவற்றை முறியடித்தார்.
மற்ற வாய்ப்புகளை நெதர்லாந்து வீரர்களே பார்வையாளர் கேலரிக்கு பந்தை அனுப்பி வீணடித்தார்கள். அர்ஜெண்டினா தரப்பிலும் லயனல் மெஸ்ஸி கள ஆட்டத்தில் கோலடிக்க கிடைத்த நிறைய வாய்ப்புகள் வீணாகின. பாதி நேரம் கடந்த போது அர்ஜெண்டினா 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் நடுவரிடம் மஞ்சள் அட்டையை வாங்கியவண்ணம் இருந்தார்கள்.