
நார்த்தாம்ப்டன்: தனது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். அவரது வழியில் மற்றொரு இந்திய வீரரான நவ்தீப் சைனியும் தனது முதல் கவுன்டி போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர், லங்காஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.