கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு தொடர்களின் போட்டிகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடக்க அடுத்த சீஸனில் பழைய கொண்டாட்டத்திற்கு மீண்டும் திரும்ப இருக்கிறது ஐ.எஸ்.எல் தொடர். இந்நிலையில் வரும் சீசனுக்காக சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது சென்னையின் எப்.சி நிர்வாகம்.
தாமஸ் பிரடாரிக்:
சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தாமஸ் பிரடாரிக். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பன்டெஸ்லிகாவின் பேயர் லெவர்குசென், ஹானோவர் 96, VfL வொல்ஃப்ஸ்பர்க் போன்ற அணிகளுக்கு ஆடியுள்ள தாமஸ் ஓர் தேர்ந்த ஸ்ட்ரைக்கர். ஓவன் கோய்லுக்குப் பிறகு ஒரு முன்னாள் வீரர் அதுவும் ஸ்ட்ரைக்ராக ஆடியவர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. காரணம், ஓவன் கோய்லுக்கு பயிற்சியாளராக இருந்தபோது சென்னை அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் கோல் மழை பொழிந்துகொண்டிருந்தார் அணியின் ஸ்ட்ரைக்கர்கள்.