நான் சுமார் 12-13 வயதில்தான் விளையாட ஆரம்பித்தேன். சீகரில் கிரிக்கெட் அகாடமிகள் அதிகம் இல்லை.
அதன் பிறகு ஒரு கிரிக்கெட் அகாடமியில் 5-6 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன்.
அதற்குப் பிறகு நான் ஜெய்ப்பூருக்கு வந்துவிட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக நான் ஜெய்ப்பூரில் பயிற்சி பெற்று வருகிறேன்.
டி20 கிரிக்கெட் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அதனால் எனக்கு அனுபவம் தேவைப்பட்டது.

இதற்காக 3-4 மாதங்கள் குருகிராமில் தங்கி, டெல்லி போட்டிகளில் விளையாடினேன்.
அது கிரிக்கெட்டிற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.
கடவுள் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், எனவே எனது திறமை மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.