நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகு பேசிய ரஷித் கான், “எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. கடந்த ஏழு, எட்டு மாதங்கள் நல்ல ஓய்வு எடுத்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல்நிலை ரொம்ப ஒத்துழைக்கிறது.
அதனால் என்னால் சிறப்பாக விளையாடவும் முடிகிறது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்.