ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டபோது என்ன நடந்தது?

Share

ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

1986-ஆம் ஆண்டின் குளிர்கால நாட்கள் அவை. ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பாகிஸ்தானை ஒட்டிய இந்தியாவின் மேற்கு எல்லை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்.

ராஜஸ்தானை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு சாலையிலும் ராணுவ வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இரயில்வே வேகன்கள் ஆயுதங்கள், டாங்கிகள் மற்றும் வாகனங்களை எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தன.

‘ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்’ தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த அளவிலான இராணுவ நடவடிக்கையை இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.

புரோபல் தாஸ்குப்தா தனது அண்மையில் வெளியான ‘ஜெனரல் பிராஸ்டேக்ஸ், தி சுந்தர்ஜி ஸ்டோரி’ புத்தகத்தில் எழுதுகிறார்: “அதே நேரத்தில் பாகிஸ்தானும் ‘சஃப்-ஷிகன்’ மற்றும் ‘ஃபிளையிங் ஹார்ஸ்’ என இரண்டு வகையான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது. ‘சஃப்-ஷிகனில்’ பாகிஸ்தான் இராணுவத்தின் தெற்குப் பகுதியின் ரிசர்வ் வீரர்கள் பங்கேற்றனர், இது ராஜஸ்தான் எல்லையில் உள்ள பகவல்பூர்-மாரோட் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தது. ‘ஃபிளையிங் ஹார்ஸில்’ பாகிஸ்தானின் வடக்குப் பகுதியின் ரிசர்வ் வீரர்கள் பங்கேற்றனர்.”

“பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் எல்லை நோக்கி நகர்ந்தது அவர்களைக் கவலையடையச் செய்தது.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com