டிரம்ப் கூறுவது போல் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? விக்ரம் மிஸ்ரி பதில்

Share

வெளியுறவு அமைச்சகம்

பட மூலாதாரம், ANI

இந்தியா தனது எண்ணெய் தேவைகளுக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கவில்லை என்றும், எதிர்காலத்திலும் அப்படிச் செய்யும் எண்ணம் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், விக்ரம் மிஸ்ரியிடம், ‘அமெரிக்கா கூறுவது போல், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா?’ என்று கேட்கப்பட்டது

”இந்தியாவின் எரிசக்தி தேவையின் சுமார் 80–85% இறக்குமதியையே சார்ந்துள்ளது. எரிசக்தி விலைகள் உயர்ந்து பணவீக்கம் ஏற்படக்கூடும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், இந்திய மக்களுக்கு போதிய அளவில், சரியான விலையில், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரங்களிலிருந்து எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முக்கிய இலக்காக உள்ளது.” என விக்ரம் மிஸ்ரி கூறினார்.

சமீப ஆண்டுகளில், உலகப் பொருளாதாரம் பல்வேறு நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது என்றும் இவை உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் நிலைத்தன்மையை பெரிதும் பாதித்துள்ளன என்றும் அவர் கூறினார்

” இந்தியா எரிசக்தி தேவைக்கும் எந்த ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கவில்லை. எதிர்காலத்திலும் அப்படிச் செய்யும் எண்ணமும் இல்லை. இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குகிறது. சந்தை நிலை, விலை, கிடைக்கும் சூழல் போன்ற காரணங்களைப் பொறுத்து இது மாறக்கூடும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com