19-வது ஐ.பி.எல் சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.
எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே ceo காசிவிஸ்வநாதன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் யார்? என்பதை எல்லாம் கேப்டன் ருதுராஜ் முடிவு செய்வார்.
அணியில் யார் யாருக்கு என்ன ரோல் என்பதை எல்லாம் ருதுராஜ் மற்றும் பிளெமிங் முடிவு செய்வார்கள்.
நாங்கள் ஏலத்தில் எடுத்த இளம் வீரர்கள் எல்லாம் நன்றாக விளையாடக் கூடியவர்கள்” என்று தெரிவித்தார்.