முடிவுக்கு வந்த செவிலியர் போராட்டம் – அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

Share

தொடர்ந்து போராடும் செவிலியர்கள்: காரணம் என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு முழுவதும் மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர். இந்நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் ஆறு நாட்களைக் கடந்த நிலையிலும் தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமெடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம். செவ்வாய்க்கிழமையன்று நண்பகலில் அந்த இடம் முழுவதையும் காவல்துறை சுற்றி வளைத்திருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையைவிட, அங்கிருக்கும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள் செவிலியர்கள். அவர்கள், பெரிய ஊடக கவனமின்றி ஆறாவது நாளாகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com