இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ரவிசந்திரன் அஷ்வின், ” இந்திய கிரிக்கெட்டில் அனைத்தும் மறைமுக பேச்சுவார்த்தையில் தான் நடக்கிறது என்ற விஷயத்தை நான் வெளிப்படையாகச் சொல்வேன்.
இது மாற வேண்டும் என்று நினைக்கிறேன். தேர்வுக்குழு மற்றும் வீரர்கள் ஆகிய இரு தரப்பிடமும் மாற்றம் வேண்டும்.
ஏனெனில் ஏதேனும் விஷயம் மறைமுகமாக சொல்லப்பட்டால் அது செய்தியாக வெளி வருகிறது.
அது பிரச்னைகளையே ஏற்படுத்தும். ஷமி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்த பிறகு தான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
இதனால் அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஏனெனில் அவரிடம் தேர்வுக்குழு தெளிவாக எதையும் சொல்லவில்லை.
விரைவில் அவரிடம் தொலைபேசியில் பேசுகிறேன் என்று அகர்கர் சொன்னதை நான் விரும்புகிறேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஷமியை அகர்கர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விளக்கத்தை அளித்திருப்பார் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.