ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களை தடை செய்த தாலிபன்கள்

Share

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில் இருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களை தாலிபன் அரசு நீக்கியுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்திலிருந்து புத்தகங்களை நீக்குமாறு கூறப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில் இருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களை தாலிபன் அரசு நீக்கியுள்ளது. மனித உரிமைகள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கற்பிப்பதும் புதிய தடையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 680 புத்தகங்கள் “ஷரியா மற்றும் தாலிபன் கொள்கைக்கு எதிரானவை” என்று கூறி நீக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 140 புத்தகங்கள் பெண்கள் எழுதியவையாகும். “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” (“Safety in the Chemical Laboratory”) போன்ற தலைப்புகளும் அதில் அடங்கும்.

மேலும் பல்கலைக்கழகங்களில் 18 பாடங்களை கற்பிக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவை “ஷரியாவின் கொள்கைகளுக்கும் தாலிபன் அமைப்பின் கொள்கைக்கும் முரண்படுகின்றன” என்று ஒரு தாலிபன் அதிகாரி கூறினார்.

தாலிபன்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். அந்த வரிசையில், இந்த ஆணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com