பெருந்துறை தொழிற்பேட்டையால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் என்ன பிரச்னை? பிபிசி தமிழ் கள ஆய்வு

Share

  பெருந்துறை சிப்காட், நிலத்தடி நீர், மாசுபாடு, தமிழ்நாடு

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

பெருந்துறை சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் ‘இந்த ஆழ்குழாய் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சிப்காட் வளாக ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர்தான் இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கு தீர்வு காணப் போராடி வரும் அமைப்பினர், சிப்காட் வளாக ஆலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.

ஆலைகளுக்கு அரசு வழங்கும் காவிரி நீரின் விலையை உயர்த்தினால்தான், சுத்திகரிப்பு சரியாக நடக்கும் என்று போராட்டக்குழுவினர் கூறுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com