வக்ஃப் சட்டத் திருத்தம் – அதிமுக எதிர்த்து வாக்களித்தது விவாதமாவது ஏன்?

Share

வக்ஃப் சட்டத் திருத்தம்: அ.தி.மு.க எதிர்த்து வாக்களித்தது விவாதமாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வியாழக் கிழமையன்று (ஏப்ரல் 3) அதிகாலையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும் எதிராக 233 பேரும் வாக்களித்திருந்தனர்.

தொடர்ந்து, வியாழக் கிழமையன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடந்தது. மறுநாள் அதிகாலை வரை நடந்த இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 128 பேரும் எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க-வுக்கு தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன், தர்மர் என 4 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தர்மர் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com