வேங்கைவயல்: சிபிசிஐடி அறிக்கை பற்றி வேங்கைவயல் மக்கள் கூறுவது என்ன?

Share

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு
படக்குறிப்பு, வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது(கோப்புப் படம்)

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாக வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், வேங்கைவயல் மக்களும் பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதை ஏற்கவில்லை.

அதே ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில், நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி, இதுதொடர்பான நிலை அறிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தின் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி வெளியான பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க. ஆகியவை சி.பி.சி.ஐ.டி. சொல்வதை ஏற்க முடியாது என்றும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரியுள்ளன. வேங்கைவயல் மக்களும் இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com