Doctor Vikatan: என் மூத்த மகளுக்கு எட்டு வயதும், இரண்டாவது மகளுக்கு நான்கரை வயதும் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் அடிக்கடி சளித்தொல்லை இருந்து வருகிறது. ஆங்கில மருந்துகள் எடுத்தாலும் 15 நாள்களுக்குள் மீண்டும் சளி வந்துவிடுகிறது. கடந்த நான்கைந்து மாதங்களாக ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து வருகிறோம், இருப்பினும் முழுவதும் குணமாகவில்லை. . துளசி, கற்பூரவள்ளி, தும்பை, குப்பைமேனி, அப்பகோவை சாறும் கொடுத்தோம். உணவுமுறை மாற்றம் பயன் தருமா?
பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் அ. முகமது சலீம்
குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சகஜம்தான். அதுவே வருட கணக்கில் தொடர்ச்சியாக இருப்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். முதலில் பாரம்பர்ய பின்னணி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்றால் சுற்றுச்சூழல் அல்லது உணவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என பார்க்க வேண்டும்.